×

பில்கிஸ் பானுவுக்கு 2 வாரத்தில் இழப்பீடு வழங்க உத்தரவு

புதுடெல்லி: குஜராத்தில் கடந்த 2002ல் நடந்த கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ₹50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை மற்றும் அவரது விருப்பப்படி வீடு ஒன்று வழங்க மாநில அரசுக்கு கடந்த ஏப்ரல் 23ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பில்கிஸ் பானுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டை குஜராத் அரசு ஏன் இன்னும் வழங்கவில்லை என்று கண்டித்ததுடன், இன்னும் 2 வாரத்தில் நீதிமன்றம் அறிவித்த இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டது.

Tags : Pilgis Banu , Bilgis Banu, Compensation
× RELATED குஜராத் கலவரத்தின் போது பலாத்காரம்...