மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களை புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் கொடுமை தொடர்கிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
அதிகாரத்தின் ஆணவத்தால் ஜனநாயகத்தை பாஜ அரசு அழிக்கின்றது. - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
ஆட்சியில் இருந்துகொண்டு நிர்வாகம் செய்யும் விவகாரத்தில் தற்போதைய சூழலில், கம்பி மேல் நின்றுகொண்டு பயணம் செய்வதை போல உள்ளது. - கர்நாடக முதல்வர் எடியூரப்பா
370 மற்றும் 35ஏ பிரிவை நீக்கியதன் மூலம் இனி காஷ்மீர் வளர்ச்சியின் பாதையில் பயணிக்கும் என அம்மாநில மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் உறுதி அளிக்கிறேன். - உள்துறை அமைச்சர் அமித்ஷா