×

கசோகியை கொல்ல உத்தரவிடவில்லை: சவுதி இளவரசர் சல்மான் மறுப்பு

நியூயார்: `‘பத்திரிகையாளர் கசோகியை கொல்ல நான் உத்தரவிடவில்லை’’ என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். சவுதியை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, `வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் கட்டுரையில், சவுதி அரசை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதினார். இதனால் அவர் சவுதி அரசின் கடும்  கோபத்துக்கு ஆளானார். இதனிடையே, தன்னுடைய திருமண ஆவணங்களை பெறுவதற்காக கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு கசோகி  சென்றார். அதன் பின்னர் அவர் மாயமானார். சவுதி தூதரகத்தில் அவர் கொல்லப்பட்டதாக துருக்கி அரசு குற்றம் சாட்டியது. ஆனால் கசோகி கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சவுதி அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.

 இந்நிலையில், கடந்த  வாரம் வெளியான அமெரிக்க பொது ஒளிபரப்புத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்றில், கசோகி கொலை தனது கண் முன்னே நடந்ததாகவும் அதற்கு முழு பொறுப்பேற்று கொள்வதாகவும் சல்மான்  தெரிவித்தார்.
ஆனால், அமெரிக்காவில் கடந்த ஞாயிறன்று ஒரு மணி நேரம் ஒளிபரப்பான பேட்டியொன்றில், `‘சவுதி அரேபியாவின் தலைவர் என்ற முறையில் கசோகியின் கொலைக்கு பொறுப்பேற்று கொள்கிறேன். ஏனெனில்  சவுதி அரசில் பணிபுரியும் தனிமனிதர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதால் பொறுப்பேற்கிறேன். மற்றபடி, கசோகியை கொலை செய்ய உத்தரவிடவில்லை’’ என்று சவுதி இளவரசர் சல்மான் கூறியுள்ளார்.

Tags : Salman ,Saudi ,prince ,Kazuki Saudi ,Kazuki , Kazuki, Saudi Prince Salman
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...