மதுரை: சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ, வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார், யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) நடக்கிறது. இதில் கைதான ஈரோட்டைச் சேர்ந்த சந்திரசேகர், நாமக்கல் பிரபு, திருச்செங்கோடு கிரிதர் மற்றும் சுரேஷ் ஆகிய 4 பேரும் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வீ.பார்த்திபன் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.