சென்னை: உலகத்திலேயே மிகவும் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யை உலகமே உற்று நோக்கும் கல்விச்சாலை இது என்று அவர் கூறியுள்ளார். மேலும் பொதுவான சவால்களை சந்திப்பதற்கு இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.