×

புதுச்சேரி மாநில காமராஜர் நகர் காங்.வேட்பாளர் ஜான்குமார் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

சென்னை: புதுச்சேரி மாநில காமராஜர் நகர் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப்பெற்றார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் காமராஜர் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தி  போட்டியிடுகிறார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரன், புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதியில் ஜான் குமார் போட்டியிடுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர்  சோனியாகாந்தி அறிவித்தார்.இதைத் தொடர்ந்து நாங்குநேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரூபி மனோகரன் நேற்றுமுன்தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து ேநற்று காமராஜர் நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜான்குமார் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு மு.க.ஸ்டாலின் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். அப்போது புதுச்சேரி  காங்கிரஸ் கட்சியினர், வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யுமாறு ஸ்டாலினை கேட்டு கொண்டனர். அதற்கு ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி., உள்ளிட்ட  பலர் உடன் இருந்தனர்.

Tags : Puducherry State ,Kamaraj Nagar Cong ,MK Stalin ,Jankumar ,Kamaraj Nagar , Puducherry ,Kamaraj , Candidate, Congratulations, Jankumar, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...