×

சோழவரம் அருகே பரிதாபம் லாரி மோதி 3 பேர் பலி

புழல்: மீஞ்சூர் அருகே உள்ள பள்ளிப்புரம் பகுதியை சேர்ந்தவர் அஜித் (25). இவருடைய நண்பர்கள் மீஞ்சூர் அடுத்த சீமாவரம் சந்துரு (25), மாரி (29). இவர்கள் மூவரும் நேற்று மாலை ஒரே பைக்கில் சோழவரம் அருமந்தை பைபாஸ் சாலையில் சென்றபோது, எதிரே வந்த டேங்கர் லாரி மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
* கோயம்பேடு மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்யும் ரஞ்ஜித்குமார் (48) என்பவரை, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சரமாரி தாக்கிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலு (29), சிவா (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
*  சேலையூர் அடுத்த அகரம்தென் லட்சுமி தெருவை சேர்ந்த கணேசன் (70), நேற்று முன்தினம் இரவு அகரம்தென் - மப்பேடு சந்திப்பு அருகே சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி இறந்தார்.
*  கிழக்கு தாம்பரம் வி.வி.எஸ் ஐயர் தெருவில் தங்கியுள்ள திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜோ (26) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்த மர்மநபர்கள், உள்ளே இருந்த லேப்டாப், செல்போனை திருடிச் சென்றனர்.
*  செங்குன்றம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட அம்பத்தூர் பானுநகர் 36வது தெருவை சேர்ந்த நந்தகுமார் (22), ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கதை சேர்ந்த சூர்யா (23) மற்றும் 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
*  கொளத்தூர் மகாவீர் நகர் முதல் தெருவை சேர்ந்த சார் நீ பூலா (42) என்பரின் வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 13 சவரன் நகைகள் ₹50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.



Tags : lorry collision ,Cholavaram Cholavaram , Three killed ,awful lorry,collision, Cholavaram
× RELATED திருப்பத்தூர் நாட்றம்பள்ளி சண்டியூர்...