×

மேலூர் அருகே கிராமத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு

மேலூர்: மேலூர் அருகே கிராமத்திற்குள் நுழைந்த மலைப்பாம்பு கோழிகளை விழுங்கியது. மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள சானிபட்டியில் சமீபகாலமாக பலரின் வளர்ப்பு கோழிகள் மற்றும் அதன் குஞ்சுகள் திருடு போய்க் கொண்டிருந்தது. திடீர் திடீரென கோழிகள் காணாமல் போனதால் கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், நேற்று குடியிருப்பு பகுதியில் ஒரு கோழியை விழுங்கிக் கொண்டிருந்த 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை கிராமத்தினர் பார்த்தனர்.

அதை விரட்டி சென்று பிடித்த அவர்கள் சாக்குபையில் அதை போட்டு விஏஓ சரவணனிடம் ஒப்படைத்தனர். விஏஓ இது குறித்து வனத்துறையிடம் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து மலைப்பாம்பை மீட்டு அருகில் உள்ள மலைப் பகுதிக்கு சென்று அதை விட்டு விட்டனர்.

Tags : village ,Melur ,Muttur ,Malappamalur , Mathur, Malappamaloor, Hilltop
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...