போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது. இதனை பார்த்த ஊர்மக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித் தனர். அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதை தொடர்ந்து, பிடிப்பட்ட மலைப்பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவிக்கப் பட்டது.