×

7 பெண்களை மிரட்டி பலாத்காரம்: ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை

சேலம்:  சேலம் அருகே 7 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அடுத்த செல்லியம்பாளையம் மதுரைவீரன் கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பிள்ளை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள  கழிப்பறையில், வாலிபர் ஒருவரை ஹோமோசெக்ஸ்க்கு அழைத்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, மோகன்ராஜ் மிரட்டி பலாத்காரம் செய்யும் வீடியோ ஒன்று, சமூக  வலைதளங்களில் வைரலானது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரது செல்போனை வாங்கி ஆய்வு ெசய்ததில் கல்லூரி மாணவிகள் உட்பட 7 பெண்களை, மோகன்ராஜ் பலாத்காரம் செய்தது அம்பலமானது. அந்த பெண்களை  கூட்டாளிகளுக்கும் விருந்தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து காகாபாளையத்தை சேர்ந்த மோகன்ராஜின் கூட்டாளிகள் சிலரை போலீசார் மடக்கி பிடித்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த மோகன்ராஜை  நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கவும்  முடிவு செய்துள்ளனர். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தால், இவரது பின்னணியில் யார், யார் உள்ளார்கள் என்பது குறித்து தகவல் அம்பலமாக வாய்ப்புள்ளது. அதனால் மோகன்ராஜை  காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஸ்டாண்டில் இருந்து  மாயமான ஆட்டோக்கள்:
மோகன்ராஜ் ஆட்டோ நிறுத்தும் ஸ்டாண்டில், 40க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிற்கும். இதில் அவரது கூட்டாளிகள் சிலர், உரிமம் இல்லாத ஆட்டோக்களை ஓட்டி வந்ததாக புகார் எழுந்தது. இந்த ஆட்டோக்களை அவர்கள், கஞ்சா கடத்தலுக்கும்,  பெண்களை ஏற்றிச் செல்வதற்கும் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், பாலியல் பலாத்கார சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அங்கு வந்து செல்லும் கூட்டாளிகள், அதனை தவிர்த்து விட்டனர். தற்போது  பத்துக்கும் குறைவான ஆட்டோக்களே, அந்த ஸ்டாண்டில் நிற்கிறது.

Tags : women ,auto driver , 7 women, forcible auto driver
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...