வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் முருகனும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கோர்ட் அனுமதியுடன் 15 நாட்களுக்கு ஒருமுறை இருவரும் சிறையில் சந்தித்து பேசி வருகின்றனர். அதன்படி, முருகனை நேற்று காலை போலீசார் பெண்கள் தனிச்சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு நளினியுடன் அவர் 1 மணிநேரம் சந்தித்து பேசினார். பின்னர் முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.