×

பொதுமக்களை சரமாரி தாக்கிய ஒடிசா வாலிபர் கைது: சைக்கோ ஆசாமியா என விசாரணை

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் சுரேந்திரா நகர், மேடவாக்கம் பிரதான சாலை போன்ற பகுதிகளில் உள்ள  வீடு, கடைகள் போன்றவற்றில் ஒரு வாலிபர் புகுந்து உருட்டு கட்டையால்  பலரையும் தாக்கி வருவதாக ஆதம்பாக்கம் போலீசாருக்கு  புகார் வந்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலன், எஸ்ஐ திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர், போலீசாரையும் ஆக்ரோஷத்துடன் தாக்க முற்பட்டார். அந்த வாலிபர் சைக்கோவாக இருக்கக்கூடும் என்று கருதிய போலீசார், அவரை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து, கயிற்றால் கட்டி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த குருநாயக் (30) என்பது தெரிந்தது. இவர் நேற்று முன்தினம் ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் இடுப்பில் வெறும் துண்டுடன் திரிந்தபோது, ஒரு பெண் இவருக்கு துணிமணி மற்றும் 50 கொடுத்து அனுப்பி  உள்ளார். இந்நிலையில், நேற்று ஆதம்பாக்கம் மேடவாக்கம் சாலையில் போர்வெல் தொழில் செய்யும் முருகன் (50), கணேசன் (40), ஆதம்பாக்கம் சுரேந்திரா நகரை சேர்ந்த  உதயமூர்த்தி (29) உள்ளிட்ட 6 பேரை, குருநாயக் உருட்டு கட்டையால் பலமாக  தாக்கிவிட்டு தப்பியது தெரிந்தது.இதில், உதயமூர்த்தி மண்டை உடைந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரின் மனநிலையை அறிய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்துள்ளனர்.



Tags : Odisha ,civilians ,Investigation ,Psycho Azamiya Investigating Civilians for Odisha Youth: Psycho Azamiya , Public, Odisha Youth, Arrest, Psycho
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை