×

அலங்காநல்லூர் ஒன்றியத்திலுள்ள கிராமங்களில் ஹைமாஸ் விளக்கு பொருத்தியதில் மெகா ஊழல்..?: பொதுமக்கள் குற்றச்சாட்டு

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு அச்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்கள் தோறும் உயர் வெளிச்சம் தரக்கூடிய ஹைமாஸ் உயர் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு கிராமங்களில் இந்த விளக்கு அமைக்கும் பணி நடைபெறவில்லை. ஆனால் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பு பெறாத இந்த விளக்குகள் 4.60 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதாக விளக்கு மேடையில் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது. இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த பகுதி இளைஞர்கள் சேகரித்தனர். இதில் இந்த ஹைமாஸ் விளக்கு பொருத்துவதில் மிகப் பெரிய ஊழல் நடந்தது தெரியவந்துள்ளது.

இதற்கு துணை போன அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகள், ஒப்பந்தகாரர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஊழலுக்கு துணை போனதாக கூறப்படுகிறது. மேலும் யூனியன் அதிகாரிகள் இந்தபகுதி கிராமங்களில் .பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஒய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘முந்தைய அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு கொட்டகை, கலர் டி.வி, சத்துணவு முட்டை கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப்பெரிய ஊழல்கள் நடந்து. அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதேபோல் தற்போது கிராமங்கள்தோறும் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தியதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் உயர்கோபுர மின் விளக்குகள் பொருத்திவிட்டு, 4.60 லட்சம் மதிப்பில் செலவு கணக்கு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் 3.60 லட்சத்திற்கு மேல் உழல் செய்துள்ளதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இது தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டு தமிழகம் முழுவதும் இதேபோல் ஹைமாஸ் விளக்கு பொருத்தியதில் நடந்த முறைகேட்டை கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்க வலியூறுத்தி பொதுமக்கள் சார்பில் பொதுநல வழக்கு தொடர வேண்டும்’’ என்றார்.


Tags : scandal ,villages ,Hyams ,Alanganallur Union ,Alanganallur ,Madurai ,Hymas , Madurai, Alanganallur, Hymas lamp, fitting, mega scam, public, indictment
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை