×

கன்டெய்னர் மோதி வாலிபர் பலி

புழல்: மணலி புதுநகர் சுப்பிரமணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ்(27). இவர் மணலில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பொன்னேரி நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு இறக்கத்தில் சென்றபோது பின்னால், வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலைதடுமாறி லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தென்காசி பகுதியை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் கணேஷ்மூர்த்தியை(30), கைது செய்து விசாரிக்கின்றனர்….

The post கன்டெய்னர் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Pankaj ,Subramani Nagar ,Manali Pudunagar ,Manal ,Moti Walibar Pali ,
× RELATED மணல் குவாரி விவகாரத்தில் கலெக்டர்கள்...