சென்னை: பேனர் விழுந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை போலீசார் கைது செய்ததை வரவேற்று நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்தார் சுபஸ்ரீயின் தந்தை. இனி இது போன்ற மரணம் ஏற்படக்கூடாது என அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார். சுபஸ்ரீயின் தந்தை ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டம் தன் கடமையை செய்துள்ளது. முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறை நடவடிக்கைக்கும், உயர் நீதிமன்ற நடவடிக்கைக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. வேறு எங்கும் நடைபெறக்கூடாது. உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நீதிக்கு கட்டுப்பட்டு என்னுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று என் மகள் இறப்பிற்கு காரணமான பேனர் கலாச்சாரம் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.