×

தெற்காசிய யு-18 கால்பந்து பைனலில் இந்தியா

காத்மாண்டு: ‘சாப்’ கோப்பைக்கான தெற்காசிய யு-18 கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. காத்மாண்டுவில் நேற்று நடந்த அரை இறுதியில் மாலத்தீவுகள் - இந்தியா யு-18 அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு, 7வது நிமிடத்திலேயே நரேந்தர் கலோட் அபாரமாக கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து முகமது ரபி கோல் அடிக்க (45+1’) இடைவேளையின்போது இந்தியா யு-18 அணி 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இந்திய அணி, 79வது நிமிடத்தில் மன்வீர் சிங் மற்றும் 81வது நிமிடத்தில் நிந்தோய் கோல் அடிக்க 4-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவுகள் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.


Tags : India ,South Asian U-18 Football Final , South Asian U-18, Football Final, India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...