×

திண்டுக்கல்லில் பணிச்சுமை, அதிகாரி டார்ச்சரால் அங்கன்வாடி பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி பரமேஸ்வரி (36). இவர் நத்தர்ஷா தெருவில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக உயரதிகாரிகள், இவருக்கு அதிக பணிச்சுமை கொடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர், பரமேஸ்வரியை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பரமேஸ்வரி இரவு வீட்டில் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் மருத்துவமனைக்கு வந்து பரமேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். பரமேஸ்வரியை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் இரவு 11 மணியளவில்  அரசு மருத்துவமனை முன்பு திண்டுக்கல் - திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் டிஎஸ்பி மணிமாறன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதற்கிடையே பரமேஸ்வரியை திட்டிய பெண் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Dindigul ,Anganwadi ,woman employee ,suicide ,officer torcher , Dindigul commits suicide ,poisoning female, Anganwadi employee
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்