சென்னை: தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட “சாரல்” என்ற பெயரில் ஷாம்பு, “எழில்” என்ற பெயரில் பாடி வாஷ் மற்றும் “வைகை” என்ற பெயரில் கை கழுவும் சோப்பு (லிக்குட் வாஷ்) ஆகிய மூன்று புதிய வகை தயாரிப்புகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில், கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன், தலைமை செயலாளர் சண்முகம், கதர் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.