நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்துள்ளது. நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 21 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ரூபி மனோகரன் காஞ்சிபுர மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். ரூபி மனோகரனை சோனியாகாந்தி தேர்வு செய்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தகவல் தெரிவித்துள்ளார்.