×

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 167 புள்ளிகள், நிஃப்டி 58 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 167.17 புள்ளிகள் சரிந்து 38822.57 புள்ளிகளாக நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 58.80 புள்ளிகள் சரிந்து 11512.40 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் 42.39 புள்ளிகள், பஜாஜ் பைனான்ஸ் 37.46, கோடக் மகேந்திரா 28.38, ஐடிசி 27.54, ஹெச்டிஎஃப்சி பேங்க் 7.88, பார்தி ஏர்டெல் 7.47 புள்ளிகள் வரை உயர்ந்தது. இண்டஸ்லேண்ட் பேங்க் 51.14, ஹெச்டிஎஃப்சி 48.90, டிசிஎஸ் 34.86, வேதாந்தா 33.29, லார்சென் 21.55, ஓஎன்ஜிசி 17.78 புள்ளிகள் வரை சரிந்தது.

தேசிய பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் 8.53, பஜாஜ் பைனான்ஸ் 6.56, ஐடிசி 4.38, கோடக் மகேந்திரா 3.18, பஜாஜ் பின்சர்வ் 2.73, ஐஓசி 1.88 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஹெச்டிஎஃப்சி 9.42, இண்டஸ்லேண்ட் பேங்க் 7.91, டிசிஎஸ் 7.07, வேதாந்தா 6.57, அதானி போர்ட்ஸ் 4.36, லார்சென் 4.34 புள்ளிகள் வரை சரிந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ஒரு சவரன் ரூ.28792க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.49 ஆகவும், ஒரு கிலோ ரூ.49000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Sensex ,Nifty , Stock, Sensex, Nifty
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...