தருமபுரி: நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தருமபுரியைச் சேர்ந்த மாணவரிடம் விசாரணை நடைபெற்றது. மதிப்பெண்ணில் மோசடி செய்துள்ளதாக வந்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி அதிகாரிகள் புகாருக்கு உள்ளான மாணவரை அழைத்து விசாரித்தனர். மாணவரின் ஆவணங்களை சோதித்தபோது தவறு நடக்கவில்லை என்று தெரிய வந்தது.