×

சிறந்த உலகுக்கு வழிகாட்டு நெறியாக விளங்குவது மகாத்மா காந்தியின் போதனை: ஐ.நா.வில் மோடி உரை

நியூயார்க்: சிறந்த உலகுக்கு வழிகாட்டு நெறியாக விளங்குவது மகாத்மா காந்தியின் போதனை என்று ஐ.நா.வில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 130 கோடி இந்தியர்கள் சார்பாக ஐ.நா.வில் உரையாற்றுகிறேன் என்று மோடி தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய தேர்தல் இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்தது. மக்களின் மகத்தான ஆதரவுடன் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.நா.வில் பேசுவதாக மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை 12 கோடி கழிவறைகளை அரசு கட்டி கொடுத்துள்ளது. மக்களுக்காக மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2020க்குள் 2 கோடி வீடுகளை கட்டி கொடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

Tags : Mahatma Gandhi ,Teachings for the World ,Modi ,UN , Mahatma Gandhi, UN, Modi, Text
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...