கடலூர்: தேர்தலில் செலவிட்ட நிதியை இதுவரை வழங்கவில்லை என்று கூறி கடலூர் ஆட்சியரை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். துணை வட்டாட்சியர்களை பணியிட மாறுதல் செய்ததை கண்டித்தும் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காரை வருவாய்த்துறை ஊழியர்கள் முற்றுகையிட்டுள்ளதால் கடலூர் ஆட்சியரால் வெளியே செல்ல முடியவில்லை.