×

ஆம்பூரில் தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியையாக சேர்ந்த 7 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

வேலூர்: வேலூர் ஆம்பூரில் தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியையாக சேர்ந்த புகாரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்வி அலுவலர் சாம்பசிவம், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூரில் உள்ள அரசு உதவிபெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியை பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.

Tags : persons ,teacher ,Ted Examination ,Ambur Criminal Police , Ambur, ineligible, dead, teacher, 7 people, criminal police, prosecution
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...