திருவனந்தபுரம்: நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட ஜோசப் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். கேரளாவில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ஜோசப்பை தமிழகம் கொண்டு வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் உதித்சூர்யாவின் தந்தை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் இடைத்தரகரை கைது செய்தனர். ரூ.20 லட்சம் கொடுத்து ஆள்மாறாட்டம் செய்ததாக உதித்சூர்யாவின் தந்தை வாக்குமூலத்தில் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.