சென்னை: சென்னை பாரிமுனையில் வீடு இடிந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார். ஆபத்தான பழைய கட்டிடங்களை இடிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததால் விபத்து என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுவன் உயிரிழந்த நிகழ்வை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி கோரிக்கை வைத்துள்ளார்.