×

திருப்பதி பீமாவரம் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்கள் தாக்குதல்: போலீசார் துப்பாக்கிசூடு

ஆந்திரா: திருப்பதி பீமாவரம் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்கள் தாக்கியதால் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். போலீசார் பிடிக்க முயன்றபோது கடத்தல்காரர்கள் கற்களை வீசி தாக்கியதால் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதும் கடத்தல்காரர்கள் தப்பியோடிய நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் செம்மரக் கடத்தல் தடுப்பு போலீசார்  பறிமுதல் செய்தனர்.


Tags : forest ,Sheep traffickers attack ,Tirupati Bhimavaram , In Tirupati, in the wilderness, sheep-smuggling, assault, police firing
× RELATED காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட...