×

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3 கேலரிகளை திறக்க நடவடிக்கை...: டிஎன்சிஏ தலைவர் ரூபா உற்சாகம்

சென்னை: சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் திறக்கப்படாமல் இருக்கும் 3 ரசிகர் மாடங்களை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத் கூறியுள்ளார்.டிஎன்சிஏ 87வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள அனைவரும் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். டிஎன்சிஏ தலைவர் ரூபா குருநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். டிஎன்சிஏ வரலாற்று சிறப்புமிக்க அமைப்பு. பல்வேறு தலைவர்கள் இதை மிகத் திறம்பட வழிநடத்தி உள்ளார்கள்.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாகக் கட்டப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் 3 கேலரிகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்காக அரசுடன் பேசி, குத்தகை ஒப்பந்தங்கள் முறைப்படி இறுதி செய்யப்படும். டிஎன்சிஏ செயல்பாட்டில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. புகார்கள் எழுந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளம் வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து ஊக்குவிப்போம்.இவ்வாறு ரூபா கூறியுள்ளார்.


Tags : galleries ,Chepauk Stadium ,Chepauk Stadium Steps , Chepauk ,Stadium,galleries…
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...