×

விக்கிரவாண்டி, நாங்குநேரி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக, காங்கிரசுக்கு ஆதரவு: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி தலைவர் ெபான்குமார் வெளியிட்ட அறிக்கை: விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும் போட்டியிடும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் 2 தொகுதிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய களப்பணியாற்றுவது என விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி முடிவு எடுத்துள்ளது. வாங்கும் சக்தியை இழந்து மக்கள் தவிக்கின்றனர். நீட்தேர்வு, ஹைட்ரோ கார்ப்ன் திட்டம், மொழி பிரச்சனை போன்றவற்றில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட 17 நலவாரியங்கள் முறையாக செயல்படாமல் உள்ளன. கட்டுமான தொழிலாளர்களுக்கான நலவாரிய நிதியை தமிழக அரசு சூறையாட முயற்சித்து வருகிறது. புதிய தொழிற்சாலைகள் ஏதும் தொடங்கப்படவில்லை. விவசாயிகளின் வேதனைகள் தீர்க்கப்படவில்லை.இந்த ஆட்சி அகற்றப்படுவது தான் தமிழக மக்களுக்கு விடிவு.

Tags : DMK ,election ,Congress ,Vikravandi ,Nanguneri ,Nikkuneri ,announcement ,Tamil Nadu Farmers-Workers Party , Vikravandi, Nanguneri, by-election, DMK, Congress, Tamil Nadu Farmers-Workers Party
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு