சென்னை: தமிழகம் முழுவதும் காய்ச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.