×

பத்திரிக்கையாளர் ஜமோல் கசோகியின் மரணத்துக்கு தானே பொறுப்பு: சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் பேட்டி

துபாய்: பத்திரிக்கையாளர் ஜமோல் கசோகியின் மரணத்துக்கு தானே பொறுப்பு என்று சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், சவூதி அரசு குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவருமான ஜமால் கசோகி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடந்து வரும் அக்டோபருடன் ஓராண்டு ஆகும் நிலையில் அமெரிக்க பொது ஒலிபரப்புத் துறை சார்பில் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.  அதில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தனது மேற்பார்வையில் நடந்ததால் கசோகி மரணத்துக்கு தானே பொறுப்பு எனக் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

முதலில் கசோகி கொலையை மறுத்து வந்த சவூதி, பின் தங்கள் நாட்டின் தூதரகத்தில் தான் கொலை நடந்தததாக ஒப்புக் கொண்டது. ஆனால், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தான் அந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டார் என்பதை மறுத்து வந்தது. இந்நிலையில் முதன்முறையாக பேட்டி ஒன்றில் தானே பொறுப்பு என்று முகமது பின் சல்மான் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கிசவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த வருடம் செப்டம்பர் 28-ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளார். இவர் அந்த தூதுரகத்திலேயே வைத்து சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Jamol Kasogi ,journalist ,death ,Prince ,interview ,Saudi Arabia , Saudi Arabian,prince,interviews,journalist Jamol Kasogi's,death
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...