×

கொடைக்கானலில் தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

கொடைக்கானல்: கொடைக்கானலில் தாய் இறந்த சோகத்தில் மகன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆம்புலன்ஸ் பழுதால் உரிய நேரத்தில் சென்று சிகிச்சை அளிக்க முடியாமல் பரிதாபமாக இறந்தார். கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூண்டியை சேர்ந்தவர் தவநீதி (30). விவசாயி. இவரது தாய் லோகம்மாள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அதன்பின்பு தவநீதி மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது தாய் சென்ற இடத்திற்கே தானும் சென்று விடுவேன் என புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தவநீதி தனது தோட்டத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே ஆம்புலன்ஸ் பழுதாகி நின்று விட்டது. இதனால் வேறு வாகனத்தை வர சொல்லி கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தவநீதி உயிரிழந்தார். பாதி வழியிலே ஆம்புலன்ஸ் நின்று விட்தால் வேறு வாகனம் வரை அங்கேயே சில மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உரிய நேரத்தில் தவநீதியை மருத்துவமனையில் சேர்த்து இருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தவநீதி மனைவி தாமரைச்செல்வி அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Kodaikanal , Kodaikanal, suicide
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்