×

நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரியில் என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மை பணி

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி பகுதியில் கூட்டு நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் மானியாதஅள்ளி, ஏலகிரி மற்றும் வே.முத்தம்பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 75 அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நேற்று ஏலகிரி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார வளாகம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் கிராம சாலை தூய்மை பணி மேற்கொண்டனர். அதன் பின்பு ஏலகிரி கிராமத்தைச் சுற்றி உள்ள முள் புதர்களையும் அகற்றினர். இப்பணியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சிவா, சின்னசாமி மற்றும் சரவணன் ஆகியோர் செயல்பட்டனர்.

Tags : NSS ,Nallampalli Union Yelagiri , Nallampalli, students
× RELATED என்எஸ்எஸ் திட்ட முகாம்