×

கூடலூர் அருகே வீட்டை சேதப்படுத்திய யானை

கூடலூர்: கூடலூர் அருகே ஒரே வீட்டை இரண்டாவது முறையாக யானை சூறையாடியது. கூடலூரை அடுத்து பொன்வயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர் ஜெயலட்சுமி. இவர் தனது தாய் மாதவி மற்றும் சித்தப்பா மகன் அரவிந்தன் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றை யானை ஜெயலட்சுமி வீட்டை இடித்து சேதப்படுத்தியது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இதே யானை ஜெயலட்சுமி வீட்டின் ஒரு பகுதியை இடித்தது.

அப்போது அந்த அறையில் இருந்த மாதவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஏற்கனவே யானை இந்த வீட்டை இடித்த காரணத்தால் பயத்தில் மாதவி மற்றும் அவரது மகள் ஜெயலட்சுமி இருவரும் இரவு நேரத்தில் அருகிலுள்ள உறவினர்கள் வீட்டில் பாதுகாப்புக்காக தங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு யானை வீட்டை தாக்கிய போது அரவிந்தன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : house ,Cuddalore , Cuddalore, Elephant
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...