பெங்களூரு: முறைகேடாக பண பரிவர்த்தனை செய்த புகார் தொடர்பாக கடந்த மாதம் 30ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய அமாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். அவரிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்திய பின் கைது செய்த அதிகாரிகள், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செப்டம்பர் 18 வரை காவலில் எடுத்தனர். காவல் முடிந்து கடந்த 18ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை 14 நாட்கள் (அக்டோபர் 1ம் தேதி வரை) நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹர் உத்தரவிட்டார். இதனிடையே, சிவகுமாரின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அஜய்குமார் குஹர், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.