×

மஜ்னுவுடன் கோபித்துக்கொண்டு வெளியேறிய லைலா திடீர் சமரசம்: பாதுகாப்பு வழங்கிய போலீசார்

திருமலை: காதல் பறவைகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஆண் பறவையை விட்டு பிரிந்து சென்ற பெண் பறவை மீண்டும் சேர்ந்தது குறித்த ருசிகர சம்பவம் நடந்ததுள்ளது. திருப்பதி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் பெங்களூருவில் இருந்து லைலா, மஜ்னு என்ற பெயரில் இரண்டு பறவைகளை கடந்த ஆண்டு 2 லட்சம் ரூபாய்  கொடுத்து வாங்கி வந்தார். இந்த பறவையை தனது வீட்டில் கூண்டு  வைத்து வளர்த்து   வருகிறார். இந்நிலையில், லைலா மட்டும் கூண்டிலிருந்து அவ்வப்போது வெளியேறி பல இடங்களில் சுற்றிவிட்டு மாலை நேரத்தில் மீண்டும் கூண்டிற்கு வந்து மஜ்னுவுடன் கொஞ்சிக் கொண்டு இருப்பது வழக்கம். ஆனால்  மஜ்னுவுடன் ஏற்பட்ட கோபமோ, என்னவோ தெரியவில்லை, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூண்டைவிட்டு வெளியேறிய லைலா  மீண்டும் கூட்டிற்கு திரும்பவில்லை. இதனால் மோகன், லைலாவை பல இடங்களில் தேடி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருமலையில் உள்ள சேஷாத்திரி நகர் காட்டேஜ் சாலையில் லைலா இருப்பதை பார்த்தனர். மேலும், அங்கிருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பறவையின் அழகை கண்டு ரசித்து, அதனை தங்கள் செல்போனில்  படம் எடுத்தனர். இதனால் பறவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அங்கிருந்த போக்குவரத்து காவலர் பறவைக்கு பாதுகாப்பு வழங்கி வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பறவையின் உரிமையாளர் மோகன், மஜ்னுவுடன் சம்பவ இடத்திற்கு லைலாவை பிடிப்பதற்காக மற்றொரு கூண்டுடன் சென்றார். சுமார் ஒரு மணி நேர முயற்சிக்குப் பிறகு கூண்டில் லைலா சிக்கியது. இதையடுத்து லைலா, மஜ்னு இரண்டையும் மோகன் வீட்டிற்கு கொண்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Laila ,Majnu , Love Birds, Male Bird, Female Bird, Tirupati
× RELATED விஜய்யின் கோட் டில் இணைந்த திரிஷா