×

டிக்-டாக் பழக்கத்தில் தோழியுடன் ஓடிய புதுப்பெண் போலீசில் சரணடைந்தார்: கணவன் கொடுமை என வாக்குமூலம்

தேவகோட்டை: டிக்டாக் வீடியோவில ஏற்பட்ட பழக்கம் காரணமாக தோழியுடன் ஓடிய புதுப்பெண், போலீசில் சரணடைந்தார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சானா ஊரணியை சேர்ந்தவர் ஆரோக்கிய லியோ. இவரது மனைவி வினிதா (19). இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணமான 45 நாட்களில் ஆரோக்கிய லியோ, சிங்கப்பூர் சென்றுவிட்டார். அதன்பின்பு வினிதாவிற்கு திருவாரூரை சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் டிக்டாக் வீடியோவில் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது நெருக்கமான வீடியோக்கள் டிக்-டாக்கில் பரவியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆரோக்கிய லியோ, சிங்கப்பூரில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு ஊருக்கு வந்தார்.

இதனிடையே கடந்த 19ம் தேதி வினிதா திடீரென மாயமானார். 45 பவுன் நகையை எடுத்துக்கொண்டு, டிக் டாக் தோழி அபியுடன் சென்றதாக கணவர் திருவேகம்பத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை சிவகங்கை டவுன் போலீசில் வினிதா சரணடைந்தார். விசாரணைக்கு பின் அவரை திருவேகம்புத்தூர் போலீசில், சிவகங்கை போலீசார் ஒப்படைத்தனர். அப்போது வினிதா கூறுகையில், ‘எனது கணவர் கொடுமைப்படுத்தியதால் வீட்டை வீட்டு வெளியேறினேன். எனது 40 பவுன் நகையை அடகு வைத்து கணவரை வெளிநாட்டிற்கு அனுப்பினேன். வீட்டில் இருந்து ஒரு பவுன் நகையைக்கூட எடுத்து செல்லவில்லை.

ஆனால் என்னை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கிளரியம் போஸ்ட் அஸ்கான் ஓடையைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் சென்றுவிட்டதாக பரப்பிவிட்டனர். இதனால் போலீசில் சரணடைந்தேன். எனக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றார்.

Tags : Tic-Tac, the girl who ran with her
× RELATED சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி...