மஸ்கட்: மஸ்கட்டில் குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த மீனவர் ததேயுஸ் விபத்தில் உயிரிழந்துள்ளார். நடுக்கடலில் படகை பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது கடல்சீற்றத்தால் நிலைதடுமாறி இன்ஜின் மீது மீனவர் ததேயுஸ் தூக்கி வீசப்பட்டார். இன்ஜினில் சிக்கிய ததேயுஸ் உடல் நசுங்கி உயிரிழந்ததாக தகவல் கூறப்படுகிறது.