குமரி: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே ரயில் மோதி ரயில்வே தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். குழித்துறை அருகே தாமிரபரணி ஆற்றின்மீது ரயில்வே பாலத்தில் பணியில் ஈடுப்பட்டு இருந்த போது மும்பை-கன்னியாகுமரி ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ரயில் மோதியதில் பாலத்தில் பராமரிப்பு பணியில் இருந்த ராஜஸ்தானை சேர்ந்த ஜெயசந்த்மீனா கேரளாவைச் சேர்ந்த மதுசூதனன் உயிரிழந்துள்ளனர்.