×

வெங்காய விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது: செல்லூர் ராஜூ

சென்னை: வெங்காய விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார். மேலும் செயற்கையான விலையேற்றம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். வெளிமாநிலங்களில் இருந்தும் வெங்காயம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும், இந்த வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என கூறினார். இன்றிலிருந்து ரேசன் கடைகளிலும் வெங்காயம் விற்க நடவடிக்கை என கூறினார்.


Tags : Selur Raju , Necessary steps , taken , control ,price , onions,
× RELATED செல்லூர் ராஜூ விரும்பினால் அவரை...