×

திருவாரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற அக்கா, தம்பி உள்பட 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலி

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா கண்டரமாணிக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வம் (40). இவர், செசல்ஸ் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால், இவரது மனைவி கவிதா (35), மகள் திவ்யா (11), மகன் ஸ்ரீராம் (8) ஆகியோர் கண்டரமாணிக்கம் கிராமத்தில் வசித்து வருகின்றனர். திவ்யா அப்பகுதிஅரசுபள்ளி ஒன்றில் 6ம் வகுப்பும், ஸ்ரீராம் துவக்கப்பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பும் படித்து வந்தனர்.
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கியுள்ளதால் அக்காவும், தம்பியும் நேற்று மதியம் வீட்டுக்கு அருகேயுள்ள திருமலைராஜன் ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். ஆனால், 2 மணியாகியும் 2 பேரும் வீட்டுக்கு திரும்பவில்லை. கிராமமக்கள் தேடியபோது  படித்துறை பகுதியில் இருவரும் மயங்கி கிடந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் உடனடியாக குடவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல், நன்னிலம் அருகே உள்ள மயிலாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி நடராஜன் (40). இவரது மகன் வெங்கடேசன் (12). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். காலாண்டு விடுமுறைக்காக ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள மாமா வீட்டுக்கு நேற்று வெங்கடேசன் வந்திருந்தான். அங்கு, விவசாயி கஞ்சமலை என்பவரின் மகன்  விக்னேஸ்வரனுடன் (8) வெங்கடேசன் விளையாடி கொண்டிருந்தான். பின்னர், 2 பேரும் 1 மணிக்கு  புத்தாற்றில் குளிப்பதற்காக சென்றனர். இருவரும் வீடு திரும்பவில்லை. பெற்றோரும், கிராமமக்களும் தேடியபோது, படித்துறை பகுதியில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : sister ,river ,Thiruvarur ,brother , 4 people drowned , water,sister and brother
× RELATED மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின்...