×

ஏடிஎம் மெஷினை திருடி வாகனத்தில் ஏற்றிச் சென்ற 3 கொள்ளையர்கள் கைது

நாசிக்: நாசிக்கில், ஏடிஎம் மெஷினை பெயர்த்தெடுத்து அதனை ஒரு வாகனத்தில் தூக்கிச் சென்ற மூன்று கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், திரிம்பகேஷ்வர் சாலையில் பப்யா நர்சரி அருகில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் இரண்டு ஏடிஎம் மெஷின்கள் உள்ளன. நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த மையத்துக்குள் புகுந்த 6 கொள்ளையர்கள் ஒரு ஏடிஎம் மெஷினை தரையில் இருந்து பெயர்த்தெடுத்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஒரு வேனில் அந்த ஏடிஎம் மெஷினை தூக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக போலீசார் ரோந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் கொள்ளையர்கள் 6 பேரும் ஏடிஎம் மெஷினையும் வேனையும் அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். எனினும் போலீசார் விரட்டிச் சென்று கொள்ளையர்களில் 3 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மற்ற 3 பேர் தப்பியோடி விட்டனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : robbers , ATM machine, 3 robbers, arrested
× RELATED பட்டாக்கத்தியுடன் திரிந்த 2 ரவுடிகள் கைது