சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் சென்னை அண்ணாநகரில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மணி சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி சென்ற போலீசார் மீது அறிவாள்வெட்டு ஏற்பட்டதை அடுத்து விழுப்புரம் போலீசார் அவனை என்கவுன்டரில் சுட்டனர்.