×

காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பும்ரா விலகல்: உமேஷ் யாதவ் இந்திய அணியில் சேர்ப்பு

மும்பை: காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார். இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், வருகிற 2-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார். இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் அபார பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவுக்கு, முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

வழக்கமான பரிசோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் அவர் விளையாட மாட்டார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார். முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆர்வத்தில் இருந்த பும்ராவுக்கு, காயம் தடைக்கல்லாக அமைந்துவிட்டது. பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சில் எதிரணி அடித்த ரன்களின் சராசரி 19.24 விழுக்காடு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : South Africa ,Test ,Bumrah ,India ,Umesh Yadav ,squad , Test, Bumrah deviation, Umesh Yadav, Indian team
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...