×

துபாய் விமான நிலையத்தில் 2 மாம்பழங்களைத் திருடிய இந்தியர் நாடு கடத்தப்பட உள்ளார்

துபாய்: துபாய் விமான நிலையத்தில் 2 மாம்பழங்களைத் திருடிய இந்தியர் நாடு கடத்தப்பட உள்ளார். உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று, துபாய் விமான நிலையமாகும். இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமானத்தின் டெர்மினல் 3-ல் 27 வயது இந்தியர் ஒருவர் பணியாற்றி வந்தார். ஒரு நாள் இவருக்கு கடுமையான தண்ணீர்த் தாகம் ஏற்பட்டது, பக்கத்தில் தண்ணீர் இல்லை, அப்போது கன்வேயர் பெல்ட்டில் பயணிகளின் லக்கேஜ்கள் சென்று கொண்டிருந்தன. அதில் சென்ற ஒரு பாக்ஸை திறந்து தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தார்.

ஆனால், மாம்பழங்கள் இருந்ததை கண்டு அதில் இருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்துத் தின்றார். பிறகு வழக்கம் போல அவர் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.இந்த சம்பவம் நடந்தது 2017 ஆம் ஆண்டு. இந்நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவருக்கு துபாய் போலீசார் சம்மன் அனுப்பினர். அவர் தங்கியிருந்த அறையில் திருட்டுப் பொருட்கள் ஏதும் இருக்கிறதா என தேடினர். ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிசிடிவி கேமராவை பரிசோதித்தபோது இந்திய விமானம் ஒன்றின் பயணிகள் லக்கேஜை அவர் திறந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட இந்தியர் தரப்பில், தாகத்தால் 6 திர்ஹாம் மதிப்புள்ள இரண்டு மாம்பழங்கள் மட்டுமே எடுத்ததாகக் கூறப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அபராதமாக 5 ஆயிரம் திர்ஹம் செலுத்த வேண்டும் என்றும் பின்னர் அவரை நாடுகடத்தலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் விரைவில் நாடுகடத்தப்பட இருக்கிறார்.


Tags : Indians ,Dubai airport ,Dubai ,Airport ,Indian , Dubai, Airport, 2 mangoes, stolen, Indian, deported
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...