×

திருச்சுழி, நரிக்குடி ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளின்றி சுடுகாடுகள்: இறுதிச்சடங்கு செய்வதில் சிக்கல்

திருச்சுழி: திருச்சுழி, நரிக்குடி ஊராட்சிகளில் உள்ள சுடுகாடுகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் இறந்தவர்களுக்கு இறுதி காரியம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருச்சுழி, நரிக்குடி ஊராட்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் சுடுகாடுகளில் சுகாதாரமின்றியும், மின்விளக்குகள் இல்லாமையும், தண்ணீர் பற்றாக்குறை என பல்வேறு அடிப்படை வசதிகளின்றி இருப்பதால், இறந்தவர்களில் இறுதிகாரியங்கள் செய்வதில் கூட சிரமங்கள் ஏற்படுகிறது. நிகழ்கால வாழ்வில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை சந்திக்கும் மனித சமுதாயம், இறந்தபின் அவர்களின் இறுதிகாரியங்களை செய்தவற்கு கூட பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு ஊராட்சி முதல் நகராட்சி வரை உள்ள சுடுகாடுகள் சுகாதாரகேடுகளின் பிடியில் உள்ளதே முக்கிய காரணமாகும். அங்கு நிலவும் துர்நாற்றத்தினால் மூக்கை பொத்திக்கொண்டு தான் பொதுமக்கள் நிற்கவேண்டியுள்ளது.

சரியான ரோடு வசதியில்லாததால் இறந்தவர்களின் உடலை வாகனங்களில் கொண்டு செல்வதில் பல சிரமங்கள் ஏற்படுகிறது. போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. பல சுடுகாடுகளில் தண்ணீர் தொட்டி இருந்தும் தண்ணீர் நிரப்பப்படாததால் இறுதிகாரியம் செய்தவர்கள் குளிப்பதற்கு கூட தண்ணீரை விலைக்கு வாங்கவேண்டியுள்ளது. அங்குள்ள நன்மை கூடங்கள் திறந்தவெளி மதுகூடமாக உள்ளது. திருச்சுழி உட்பட பல சுடுகாடுகளில் பல்வேறு அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். விளக்கு வசதியின்றி இரவு நேரங்களில் அலைபேசி வெளிச்சத்தில் தான் காரியங்கள் செய்யவேண்டியுள்ளது. இதேநிலை திருச்சுழி, நரிக்குடி பெரும்பாலான சுடுகாடுகளில் உள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Tiruchuzhi ,Narikkudy ,funeral ,facilities , Fireplace, basic facilities
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...