×

திருப்புத்தூர் அருகே 3 மாதங்களாக பஸ் வரவில்லை: 4 கிமீ நடக்கும் கிராமமக்கள்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றியம் கோட்டையிருப்பு ஊராட்சியில் காக்காளிப்பட்டி, கட்டையன்பட்டி, தேரேந்தல்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கோட்டையிருப்பில் இருந்து கட்டையன்பட்டி சுமார் 2 கி.மீ. தூரமும், காக்காளிப்பட்டிக்கு சுமார் 4 கி.மீ. தூரமும் உள்ளது. திருப்புத்தூர் டெப்போவில் இருந்து 9ம் நம்பர் டவுன் பஸ் தினந்தோறும் காலையில் சிங்கம்புணரி வந்து கோட்டையிருப்பில் இருந்து கட்டையன்பட்டி விலக்கு, காக்காளிப்பட்டி விலக்கு வழியாக தேவரம்பூர், திருக்கோஷ்டியூர், கத்தாளம்பட்டு வரை செல்லும். மாலையில் திருப்புத்தூரிலிருந்து கோட்டையிருப்பு வழியாக கட்டையன்பட்டி விலக்கு, காக்காளிப்பட்டி விலக்கு வழியாக தேவரம்பூர், திருக்கோஷ்டியூர், கத்தாளம்பட்டு வரை செல்லும்.

கடந்த 3 மாதமாக கோட்டையிருப்பில் இருந்து தேவரம்பூர் வரை 6 பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால் அருகில் மாற்றுப்பாதைகள் ஏற்படுத்தவில்லை. இதனால் பஸ் போக வசதி இல்லை. எனவே கடந்த 3 மாதமாக இந்த வழித்தடத்தில் டவுன் பஸ் செல்லவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள், வெளியூர் வேலைக்கு செல்லும் கிராமத்தினர் தினந்தோறும் சுமார் 4 கிமீ தூரம் வரை நடந்து சென்று கோட்டையிருப்பில் பஸ் ஏறுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பாலம் வேலை முடியும்வரை மாற்றுப்பாதை அமைத்து பஸ் மற்றும் வாகனங்கள் சென்றுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruputhur ,villages ,Thirupputhur , Thirupputhur, Bus
× RELATED அனைத்து பேருந்துகளும்...