×

தாயை மானபங்கப்படுத்தியதால் ரவுடியை வெட்டிக் கொன்றோம்: கைதான சகோதரர்கள் பகீர் வாக்குமூலம்

சென்னை: தாயின் ஜாக்கெட்டை கிழித்து மானபங்கம் படுத்திய ரவுடியை வெட்டி கொன்றோம் என்று அவனை கொலை செய்ததாக கைது ெசய்யப்பட்ட சகோதரர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை அருகே உள்ள கெனால் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அரி(எ)அறிவழகன்(25). ரவுடியான இவர் மீது திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், அண்ணாசதுக்கம் மற்றும் மெரினா காவல்  நிலையங்களில் கஞ்சா கடத்தல், திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை வழக்குகள் உள்ளன.கடந்த 20ம் தேதி வீட்டில் கஞ்சா போதையில் தனியாக இருந்த அறிவழகனை ஆட்டோவில் வந்த கும்பல் சரமாரி வெட்டி கொன்றது. இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதே  பகுதியை சேர்ந்த சகோதரர்களான வினோத் மற்றும் பாலாஜி ஆகியோர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து இருவரையும் செல்போன் சிக்னல் உதவியுடன் அரியலூரில் ேநற்று முன்தினம் கைது  செய்தனர்.பின்னர் சகோதரர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:திருவல்லிக்கேணியில் பிரபல ரவுடியாக வலம் வந்த பல்பு குமாருக்கும் கொலை செய்யப்பட்ட அறிவழகன் ஆதரவாளர்களான அறிவழகன் சகோதரர் சொறி விஜய், கைப்புள்ள(எ) பிரவீன், பிரசாந்த், கர்லிங், முருகன் ஆகியோருக்கும் மெரினா  கடற்கரையில் வழிப்பறி மற்றும் கஞ்சா விற்பனையில் தொழில் போட்டி இருந்து வந்தது.  இது நாளடைவில் தகராறாக மாறி ரவுடி பல்புகுமாரை அறிவழகன் தனது தம்பி சொறி விஜய் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் ேசர்ந்து வெட்டி  படுகொலை செய்தனர். இதனால் பல்புகுமார் ஆதரவாளர்களான வினோத், பாலாஜி தரப்பினர், அறிவழகன் மற்றும் அவரது தம்பி சொறி விஜய்யை கொலை செய்ய முடிவு செய்திருந்தனர். பல வழிகளில் பலமாக இருந்த அறிவழகன் தரப்பை  இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பல்புகுமார் கொலை வழக்கில் சொறி விஜய் தற்போது  புழல் சிறையில் உள்ளான்.

இதற்கிடையே கஞ்சா விற்பனையில் மீண்டும் பல்புகுமார் ஆதரவாளர்களுக்கும் அறிவழகன் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் பல்புகுமார் ஆதரவாளர்களான வினோத் மற்றும் பாலாஜி ஆகியோர் ஜாம்பஜார்  போலீசாருக்கு அறிவழகன் கஞ்சா விற்பனை ெசய்வதாக ரகசிய தகவல் அளித்தனர். அதன்படி ஜாம்பஜார் போலீசார் கடந்த மாதம் அறிவழகனை கைது செய்தனர். பிறகு கஞ்சா வழக்கில் கடந்த 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை காலை 10  மணிக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீனில் அறிவழகனை போலீசார் விடுவித்தனர்.  பிறகு அறிவழகன், வினோத் வீட்டிற்கு சென்று கஞ்சா வழக்கில் சிக்க வைத்தது குறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வினோத் தாயாரை அறிவழகன் பொதுமக்கள் முன்னிலையில் ஜாக்கெட்ைட கிழித்து மானபங்கம் செய்துள்ளார்.  இதற்கு பழிவாங்க வினோத் மற்றும் அவரது தம்பி பாலாஜி முடிவு ெசய்தனர்.

இதற்கிடையே, கஞ்சா வழக்கில் தனது அண்ணனை சிக்க வைத்தது குறித்து சிறையில் உள்ள சொறி விஜய்க்கு தகவல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த சொறி விஜய் பல்பு குமார் ஆதரவாளர்களான வினோத் மற்றும் பாலாஜியை  ஜாமினில் வெளியே வந்த உடன் கொலை செய்ய தனது ஆதரவாளர்களுடன் திட்டம் தீட்டியுள்ளார். இந்த சதி திட்டம் குறித்து அறிவழகன் ஆதரவாளர்களில் உள்ள ஒருவன், எதிர்தரப்பை சேர்ந்த வினோத் மற்றும் பாலாஜியை சந்தித்து தெரிவித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் மற்றும் பாலாஜி ஆகியோர் நம்மை கொலை  செய்வதற்கு முன்பு நாம் அறிவழகனை கொலை செய்துவிடுவோம் என்று திட்டமிட்டு கடந்த 19ம் தேதி இரவு வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டி கொலை ெசய்துள்ளனர்.இவ்வாறு இருவரும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.



Tags : Rowdy , mother,honored,killed Rowdy, confiscated, brothers
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...