×

கும்பகோணம் அருகே கோயில் குளத்தில் விஷம் கலப்பு?

கும்பகோணம்: கும்பகோணம் தாராசுரம்  மார்க்கெட் அருகே  கிருஷ்ணன் கோயிலுக்கு சொந்தமான மல்லுக குளத்தை, அந்த பகுதியை சேர்ந்த   சண்முகம் என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன் குத்தகைக்கு எடுத்து அதில்  மீன்கள் வளர்த்து வருகிறார். தற்போது ஒவ்வொரு மீனும் ஒன்றரை கிலோ  முதல் 2 கிலோ வரை வளர்ந்த நிலையில்  விரைவில் மீன்களை பிடித்து விற்க  திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை குளத்திற்கு   சண்முகம் வந்தபோது மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன. இதனால் அவர் அதிர்ச்சி  அடைந்தார். தற்போது குளத்தில் 1 டன் அளவுக்கு மீன்கள் இருந்ததாகவும்  அவை அனைத்தும் செத்து விட்டதாகவும் சண்முகம் கூறினார். மேலும்  யாரோ  குளத்தில் விஷம் கலந்து   இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : pools ,Temple ,Kumbakonam ,temple pond , Kumbakonam, temple pond, poison mix
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்