கும்பகோணம்: கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட் அருகே கிருஷ்ணன் கோயிலுக்கு சொந்தமான மல்லுக குளத்தை, அந்த பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன் குத்தகைக்கு எடுத்து அதில் மீன்கள் வளர்த்து வருகிறார். தற்போது ஒவ்வொரு மீனும் ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை வளர்ந்த நிலையில் விரைவில் மீன்களை பிடித்து விற்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை குளத்திற்கு சண்முகம் வந்தபோது மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தற்போது குளத்தில் 1 டன் அளவுக்கு மீன்கள் இருந்ததாகவும் அவை அனைத்தும் செத்து விட்டதாகவும் சண்முகம் கூறினார். மேலும் யாரோ குளத்தில் விஷம் கலந்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.