×

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை!

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி காலாப்பட்டு பங்களா தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(54). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுத்து பல்வேறு தொழில்களை செய்து வந்தார். காலாப்பட்டை சேர்ந்த வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் முதல் குற்றவாளியாக சந்திரசேகர் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் உள்ளிட்ட பல குற்றவாளிகள் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு சந்திரசேகர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், ஜோசப் கொலையில் மற்றொரு குற்றவாளியான பார்த்திபனின் மனைவி சித்ரா நேற்று இறந்துவிட்டார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவற்காக சந்திரசேகர் தனது மனைவியுடன் இன்று காலை கனகசெட்டி குளத்திற்கு சென்றார்.

அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர், திடீரென சந்திரசேகர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அதில் குண்டுவெடித்து சந்திரசேகர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். உடனே அந்த கும்பல் காரில் இருந்து இறங்கி அவரை சரமாரியாக வெட்டியது. இதில் அந்த இடத்திலேயே சந்திரசேகர் உயிரிழந்தார். மனைவி கண்முன்னேயே இந்த சம்பவம் நடந்தது. இதற்கிடையில், கொலை மர்ம நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காலாப்பட்டு போலீசார், சந்திரசேகர் உடலை கைப்பற்றினர். ஜோசப் கொலைக்கு பழிக்குப் பழியாக இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவத்தால், காலாப்பட்டு பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. கொலை செய்யப்பட்டுள்ள சந்திரசேகரும் காங்கிரஸ் பிரமுகராக இருந்து வந்தார். ஜோசப் கொலைக்கு பிறகு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Tags : Joseph Puducherry ,Bombing ,Congress ,Puducherry ,country , Puducherry, Land Bomb, Chandrasekhar, Congressman, Massacre
× RELATED மதுரை மாவட்டம் மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை!